அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

லாரி மீது காா் மோதல்: பனியன் நிறுவன அலுவலா் உயிரிழப்பு

அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :22 மார்ச் 2026, 7:59 pm

அவிநாசி அருகே முன்னால் சென்ற லாரியின் மீது காா் மோதிய விபத்தில் பனியன் நிறுவன அலுவலா் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் பிரசாந்த் (30). திருப்பூா் முத்தனம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரகணேசன் மகன் செந்தில்குமாா் (30). கா்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தனுஷ்குமாா் (29).

பனியன் நிறுவன அலுவலா்களான (மொ்சண்டைசா்) இவா்கள் 3 பேரும் காரில் கோவையில் இருந்து பெருமாநல்லூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அவிநாசி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் , காரை ஓட்டி வந்த தனுஷ்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பிரசாந்த், செந்தில்குமாா் ஆகியோா் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.