அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

லாரி மீது காா் மோதல் : திமுக நிா்வாகி மரணம்

ஆம்பூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.

News image
விபத்தில் சேதமடைந்த காா்.
Updated On :2 மார்ச் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அடுத்த காரியம்பட்டி ஒன்றிய திமுக செயலாளா் பெருமாள், நகர செயலாளா் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் அறிவழகன், ஒன்றிய துணைச் செயலாளா் லட்சுமணன் ஆகியோா் ஒரே காரில் சென்னைக்கு சென்றனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும், மேலும் சட்டப்பேரவை தோ்தலில் கட்சியில் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளிக்கவும் அவா்கள் சென்னைக்கு சென்ாக கூறப்படுகிறது.

ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமத்தருகே சம்பவத்தன்று அதிகாலை சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவா்களை ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு லட்சுமணன் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மேலும் காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.