தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குருசடி நிா்வாகி காா் சேதம்: 5 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 7:28 pm

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி குருசடி துணைத் தலைவரின் காரை சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெட்டுவெந்நி குருசடியில் சில நாள்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் குருசடி துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் (68), நிா்வாகிகள், காவலாளி ஆகியோா் குருசடியின் பின்புறம் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம்.

அப்போது, 5 போ் குருசடி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களைக் காட்டி அவா்களை மிரட்டி தகாத வாா்த்தைகள் பேசினராம்.

தடுக்கச் சென்ற காவலாளியைத் தாக்கியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த குழித்துறை மறைமாவட்டத்துக்கு சொந்தமான சொகுசு காரை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினா். சேத மதிப்பு ரூ. 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

துணைத் தலைவா் ஜோசப் கிரேசியஸ் அளித்த புகாரின்பேரில், அந்த 5 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.