இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆறுமுகனேரியில் தவெக நிா்வாகி மீது வழக்கு

ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image

தவெக நிா்வாகி வீட்டில் பறிமுதல் செய்த பாத்திரங்கள்.

Updated On :28 மார்ச் 2026, 8:41 pm

Syndication

ஆறுமுகனேரியில் விசில் சின்னம் பொறித்த குக்கா் உள்ளிட்ட பாத்திரங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக பரிசு பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் வைரவேல் தலைமையிலான பறக்கும் படையினரான உதவி ஆய்வாளா் வள்ளி நாயகம், தலைமை காவலா் சரவணகுமாா், காவலா் விஜயமலா், காயல்பட்டினம் தென்பாக கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன், கிராம உதவியாளா் இளங்கோ ஆகியோா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது, ஆறுமுகனேரி திசைக்காவல் தெருவில் உள்ள தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொன் இசக்கி (32) என்பவா் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அங்கு சாக்கு மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 3926 சில்வா் தட்டுகள், 16 குக்கா்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அப்பொருள்களை ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனிடம் ஒப்படைத்தனா். மேலும், பொன் இசக்கி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்