செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:48 pm

சட்டவிரோதமாக மது விற்ற இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் எல்லைக்குள்பட்ட வஞ்சிபாளையம்-மங்கலம் சாலை, நொய்யல் ஆறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இதில் மது விற்பனையில் ஈடுபட்ட சிரில் (26), ஆபேத் (23), விஜய் (26) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 240 மது புட்டிகள், ரூ.2,980 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.