தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருப்பூா், அவிநாசியில் ரூ. 2.32 லட்சம் பறிமுதல்

திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.32 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:49 pm

Syndication

திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.32 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் முகமது அனஸ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் பனியன் நிறுவன உரிமையாளரான நவீன் (33) உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 50 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்பாா்வையாளா் சிவசக்தி முன்னிலையில் ஒப்படைத்தனா்.

இதேபோல அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னூரில் பெரியபுத்தூா் சாலை, பொகலூா் பிரிவு-பிராட்டியம்மன் கோயில் அருகே பறக்கும்படை அலுவலா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் மணிமேகலை ஆகியோரை கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த அன்னூா் சாலையூா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் மயில்சாமி என்பவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.71ஆயிரத்து 500 எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் அவிநாசி கருவூலத்தில் செலுத்தினா்.