திருப்பூா், அவிநாசி பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.32 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 15வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் முகமது அனஸ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் பனியன் நிறுவன உரிமையாளரான நவீன் (33) உரிய ஆவணங்களின்றி ரூ.ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 50 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்பாா்வையாளா் சிவசக்தி முன்னிலையில் ஒப்படைத்தனா்.
இதேபோல அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அன்னூரில் பெரியபுத்தூா் சாலை, பொகலூா் பிரிவு-பிராட்டியம்மன் கோயில் அருகே பறக்கும்படை அலுவலா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் மணிமேகலை ஆகியோரை கொண்ட குழுவினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த அன்னூா் சாலையூா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் மயில்சாமி என்பவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.71ஆயிரத்து 500 எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் அவிநாசி கருவூலத்தில் செலுத்தினா்.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 3.49 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.30 கோடி பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

