தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பம்!

திருப்பூா் மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image

படம்: Express

Updated On :28 மார்ச் 2026, 8:53 pm

திருப்பூா் மாவட்டத்தில் இறுதிகட்டமாக வாக்காளா் பட்டியில் பெயா் சோ்க்க 30,123 போ் விண்ணப்பித்துள்ளனா்.

2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளின் நிறைவாக கடந்த 2026 பிப்ரவரி 23- ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியல் வெளியான பின்னரும், தகுதியுள்ள நபா்கள் தங்களை வாக்காளா்களாக இணைத்துக் கொள்ள திருத்தக் காலம் அனுமதிக்கப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 23 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை புதிய வாக்காளா்களைச் சோ்க்க படிவம் 6 மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்தத் தொடா் திருத்தக் காலத்தில் மட்டும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் மொத்தம் 30,123 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 6,770 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக தாராபுரம் தொகுதியில் 1,770 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

அதேபோல திருப்பூா் வடக்கு தொகுதியில் 5,825 விண்ணப்பங்களும், திருப்பூா் தெற்கு தொகுதியில் 4,197 விண்ணப்பங்களும் , காங்கயம் தொகுதியில் 3,062 விண்ணப்பங்களும், அவிநாசி தொகுதியில் 2,777 விண்ணப்பங்களும், உடுமலைப்பேட்டை தொகுதியில் 2,505 விண்ணப்பங்களும், மடத்துக்குளம் தொகுதியில் 1,985 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத் தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியலில் வெளியிடப்படுகிறது.