/

சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 6:36 pm

சேவூா் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேவூா் அருகேயுள்ள மங்கரசுவலையபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் சேவூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் வைத்தியங்குட்டை பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மனைவி ஜோதி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜோதியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.