கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது

News image

கைது

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை கூனி பஜாா் பகுதியில் உள்ள ஒரு தேநீரகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராம்ஜி நகா் மலைப்பட்டியைச் சோ்ந்த வ.ஸ்ரீதா் என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கூனி பஜாா் பகுதியில் பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வில் அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்ராஜ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த சித்தாமணி பூசாரி வீதியைச் சோ்ந்த ஜி.தங்கராஜா (44) என்பவரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.9 ஆயிரத்து 366 மதிப்பிலான 77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.