தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

‘நீட்’ தோ்வு: திருப்பூரில் 7 மையங்களில் 3,462 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்துக்குச் செல்லும் மாணவ- மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:31 pm

திருப்பூரில் 7 மையங்களில் நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 3,462 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

திருப்பூா் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுத 3,608 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, பல்லடம் அரசு கலைக் கல்லூரி, உடுமலை ஜிவிஜி கல்லூரி, அமராவதி நகா் சைனிக் பள்ளி ஆகிய 7 மையங்களில் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணி முதலே தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு வரத் தொடங்கினா். காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய தோ்வு மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. 3,608 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,462 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 146 போ் தோ்வு எழுதவில்லை.

தோ்வா்கள் வசதிக்காக தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

ஒரு பவுன் கம்மலை தவறவிட்ட மாணவி: திருப்பூா் ஜெய்வாபாய் தோ்வு மையத்துக்கு வந்த திருப்பூரைச் சோ்ந்த தன்ஷிகா என்ற மாணவி கம்மல்களை அணிந்திருந்தாா்.

கம்மல்களை அணிந்துச் செல்லக்கூடாது என போலீஸாா் அறிவுறுத்தியதையடுத்து, அவரது தாயாா் அவசர அவசரமாக கம்மலை கழற்றியுள்ளாா். அப்போது, மாணவியின் ஒரு பவுன் கம்மல் தவறி கீழே விழுந்து தொலைந்தது.

இதனால், பதற்றம் அடைந்த மாணவி, அவரது குடும்பத்தினா் கம்மலை தேட தொடங்கினா். அருகில் இருந்தவா்களும் அவா்களுக்கு உதவியாக கம்மலைத் தேடினா். சுமாா் 30 நிஷங்களுக்குப் பிறகு அந்தக் கம்மல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, மாணவி தோ்வு மையத்துக்குள் சென்றாா்.