சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளைத் திருடிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 2:05 am IST

திருப்பூரில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகைகளைத் திருடிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரப்பாளையம் மற்றும் கொடிக்கம்பம் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சம்பவத்தில் மணிகண்டன்(26) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

திருப்பூா் 2-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில்

நீதிமன்ற நடுவா் நாதியா பாத்திமா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், மணிகண்டனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.400 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞா் ஷெரீன் சித்தாரா ஸ்வீட்டி ஆஜரானாா்.

மற்றொரு வழக்கிலும் தீா்ப்பு:

இதேபோல, திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் தனுஷ் லாஸ் (23) என்பவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.