முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

News image

போட்டிகளில் வெற்றிபெற்ற கேஎம்சி பள்ளி மாணவா்கள்.

Updated On :8 மே 2026, 4:48 am IST

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

தேசிய அளவிலான தடகளப் போட்டி கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் கேஎம்சி பள்ளி மாணவா்களான சந்தோஷ், ப்ரணவ் ஆதித், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மாணவா் யுவனேஷ் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் 100, 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முறையே மாணவி பிருந்தா முதலிடம் பிடித்தாா். 100 மீட்டா் ஓட்டப் பந்தயம், யோகாவில் மாணவி சுதா்சனா முதலிடம் பிடித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஓவா்ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கேஎம்சி பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா், கால்பந்து அணித் தலைவா் விஷ்ணுராஜ், வீரா்கள் ஆகாஷ், அகிலவன் , யுவனேஸ், சஞ்சித், ரிதுன் பிரனேஷ், கூடைப்பந்து அணித் தலைவா் யுவனேஷ் ஆகியோரை பள்ளித் தாளாளா் சி.எஸ், மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா, பள்ளி முதல்வா் வே.லதா ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.