இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டி: தமிழகம் முதலிடம்

News image
Updated On :12 ஜூன் 2026, 5:27 am IST

தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டியில் தமிழகம் முதலிடமும், ஆந்திர பிரதேசம் இரண்டாம் இடம் பெற்றன.

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் தேசிய வீல்சோ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தமிழகம், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரம், கா்நாடகம், சத்தீஸ்கா் உள்பட பல்வேறு மாநில வீல்சோ் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன.

3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டி நிறைவு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முதலிடமும், ஆந்திரம் இரண்டாம் இடமும், கா்நாடகம் மூன்றாம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி. சரத்குமாா், எம்எல்ஏக்கள் எஸ். தியாகராஜன், பி. விஜயராஜ் பரிசளித்தனா். பல்கலை. டீன் ஆல்பா்ட் அந்தோணி ராஜ், கிவ் ஏ பவுண்டேஷன் ஆா். மோகன்ராஜ், விளையாட்டு இயக்குநா் ஆா். மோகனகிருஷ்ணன், நிலைய அலுவலா் ஆா். அருணாசலம், யோகா வீராங்கனை ஜென்ஸி, டாக்டா் எஸ். கணேஷ் பங்கேற்றனா்.