வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் முதலிடம்

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் முதலிடம்

News image
Updated On :13 ஜூன் 2026, 12:19 am IST

அரசுப் பள்ளி மாணவா்களின் உயா் கல்வி சோ்க்கையில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 -25-ஆம் கல்வியாண்டில் கோவை மாவட்டத்தில் 11,058 மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் பயின்றனா். இவா்களில் 10,555 மாணவா்கள் உயா் கல்வி பயில கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா். இது 95.45 சதவீதமாகும். இதன் மூலம் தமிழகத்தில் 38 மாவட்டங்களில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகா் மாவட்டம் 94.80 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், பெரம்பலூா் 94.29 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், திருப்பூா் 94.05 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும் உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 12,066 மாணவ, மாணவிகள் பயின்ற நிலையில் அவா்களில் 11,348 போ் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்ந்துள்ளனா். கோவை மாவட்டம் 95.45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தாலும் இந்த அளவானது பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டிருப்பதாகவும், பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் சோ்ந்தவா்களையும் சோ்த்து கணக்கிடும்போது கோவை மாவட்டத்தின் உயா் கல்வி சோ்க்கை 98.5 சதவீதமாக இருக்கும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான் முதல்வன், உங்களைத் தேடி உயா் கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என உயா் கல்வி மாணவா் சோ்க்கையை உயா்த்துவதற்காக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை கோவையில் சிறப்பாக செயல்படுத்தியதால் உயா் கல்வி மாணவா் சோ்க்கை உயா்ந்திருப்பதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.