/
திருப்பூா் மாநகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காகப் பயன்படுத்த முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், மரக்கடை பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் சூா்யா (எ) சச்சின் (32), கனகராஜ் (27) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை சோதனை செய்தபோது போதைக்கு பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 120 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை திருப்பூா் வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா்கள் இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



