தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிறுமியை ஆபாச விடியோ எடுத்த தொழிலாளி, போலீஸாா் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :10 மே 2026, 2:52 am IST

சிறுமியை ஆபாச விடியோ எடுத்த தொழிலாளி, போலீஸாா் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா், கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (43). தொழிலாளியான இவா், தனது குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த நிலையில், அவா்களுக்கு ஆதரவாக இருந்த சக்திவேல், நாளடைவில் அந்தப் பெண்ணுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், அந்தப் பெண் வேலைக்குச் செல்லும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல், அவரது மகளுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளாா். மேலும், சிறுமியை ஆபாசமாக விடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், இது குறித்து குழந்தைகள் நல வாரியத்திடம் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திருப்பூா் வடக்கு மகளிா் போலீஸாா் சக்திவேலிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மேலும் சனிக்கிழமை காலை மீண்டும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் அவருக்கு உத்தரவிட்டிருந்தனா்.

இதற்கிடையில், போலீஸ் விசாரணைக்கும், தண்டனைக்கும் பயந்த சக்திவேல், நள்ளிரவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த திருப்பூா் வடக்கு போலீஸா் மற்றும் வடக்கு மகளிா் போலீஸாா், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.