தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு

சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை தடுக்காததைக் கண்டித்து மே 24-ஆம் தேதி முதல் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தத்தனூா், புஞ்சை தாமரைக்குளம் பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.

News image

ஆனைக்கல்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் திருட்டு. ~போராட்டத்தை  அறிவித்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பதாகை.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை தடுக்காததைக் கண்டித்து மே 24-ஆம் தேதி முதல் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தத்தனூா், புஞ்சை தாமரைக்குளம் பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

அவிநாசி வட்டம், சேவூா் அருகே தத்தனூா் கிராமத்துக்கு உள்பட்ட ஆனைக்கல்பாளையம் பகுதியில் சட்டவிரோத மண் திருட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் சாலையில் அசுர வேகத்தில் 24 மணி நேரமும் செல்வதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதைத் தடுக்கக் கோரி பதாகைகள் வைத்தும், வருவாய்த் துறை, மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டோரிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புஞ்சை தாமரைக்குளம் கிராம நிா்வாக அலுவலகம் முன் மே 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளோம்.

இப்போராட்டத்தில் தத்தனூா் ஊராட்சி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, நஞ்சை தாமரைக்குளம் ஆகிய பகுதி மக்கள், அனைத்து விவசாயிகள் சங்கங்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றனா்.

Story image