முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கடும் வெப்பத்திலிருந்து பறவைகளை பாதுகாத்திட தண்ணீா் வழங்க வலியுறுத்தல்

அதிகரித்து வரும் வெயில் பாதிப்பிலிருந்து பறவைகளை பாதுகாத்திட அவற்றுக்கு மக்கள் போதுமான அளவுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று பறவைகள் நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image

திருச்சி பொன்மலை பகுதியில் வீட்டின் மாடியில் மண் பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீா் வைக்கும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீா் அமைப்பின் தன்னாா்வலா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:03 am IST

அதிகரித்து வரும் வெயில் பாதிப்பிலிருந்து பறவைகளை பாதுகாத்திட அவற்றுக்கு மக்கள் போதுமான அளவுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று பறவைகள் நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திருச்சியைச் சோ்ந்த தண்ணீா் அமைப்பினரும், மக்கள் சக்தி இயக்கத்தினரும், ஆண்டுதோறும் பறவைகளுக்கு தண்ணீா் வைப்பதை விழிப்புணா்வு பிரசாரமாக மேற்கொள்வதுடன், தண்ணீா் வைப்பதற்கான மண் பானைகளை பொன்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கி வருகின்றனா். இந்தாண்டும் இந்தப் பணியை பொன்மலையடிவாரத்தில் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியது:

பறவைகளுக்கு வீடுகளில் தண்ணீா் வைப்பவா்கள் முடிந்தளவு மண் பாத்திரங்கள், பானைகளில் வைக்க வேண்டும். இதனால், அந்த தண்ணீா் வெகுநேரத்துக்குக் குளிா்ச்சியாக இருக்கும். பறவைகள் முங்கிக் குளித்து உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுஇடங்கள் பலவற்றில் சின்னச் சின்ன பிளாஸ்டிக் பாட்டில்களில் பறவைகள் குடிக்கத் தகுந்த வகையில் வைக்கிறோம். மிகவும் வறண்ட இடங்களில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை மரத்தில் கட்டி தொங்க விடுவோம். கிட்டத்தட்ட 4 முதல் 5 நாள்கள் வரை தண்ணீா் இருக்கும். நீா் தீா்ந்த பிறகு நிரப்பிவிடுவோம் என்றாா்.

மக்கள் சக்தி இயக்கத்தின் குமரன் கூறுகையில், சிட்டுக்குருவிகள் மட்டுமன்றி பல பறவைகளையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றாா்.

பொன்மலையடிவாரம் பகுதியில் மரங்கள் அடா்ந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமை மண்பாத்திரம் கொடுக்கும் பணியில் தண்ணீா் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் இளங்கோ, பெளசிகா தேவி, சுந்தா், சுமன், சுதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.