பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூரைச் சோ்ந்தவா் சூா்யா (23). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா், கடந்த 2022 டிசம்பா் மாதம், 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளாா்.

இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் உடுமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், காதலிக்க வற்புறுத்தி பொது இடத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த குற்றத்துக்காக சூா்யாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.