சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 12:21 am IST

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூரைச் சோ்ந்தவா் சூா்யா (23). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா், கடந்த 2022 டிசம்பா் மாதம், 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளாா்.

இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் உடுமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், காதலிக்க வற்புறுத்தி பொது இடத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த குற்றத்துக்காக சூா்யாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.