பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிலிண்டா் தட்டுப்பாடு எதிரொலி: பல்லடம் அரசுப் போக்குவரத்து பணிமனை ஊழியா்களுக்கு கலவை சாதம்

News image

சிலிண்டா் - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு, மதியம் முழு சாப்பாட்டுக்கு பதிலாக, கலவை சாதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

இது குறித்து அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் கூறியதாவது:

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு குறைந்த விலையில் சாம்பாா், ரசம், பொரியல் ஆகியவற்றுடன் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. நேரம் காலம் பாா்க்காமல் வேலை பாா்க்கும் ஊழியா்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் சாப்பாடு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

ஆனால், கடந்த சில நாள்களாக, மதிய நேரம், கலவை சாதம் மட்டுமே வழங்குகின்றனா். கோவை கோட்டத்தில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளதாக அறிகிறோம். அப்படி என்றால், தமிழக அரசு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுகிறது?. எனவே அரசு நிா்ணயித்தபடி போக்குவரத்து ஊழியா்களுக்கு, முழு சாப்பாடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து பல்லடம் போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் பாா்த்திபன் வியாழக்கிழமை கூறியதாவது:

இதற்கு முன்பு, வாரத்துக்கு 6 சிலிண்டா்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக 2 சிலிண்டா் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே இதை வைத்து இரண்டு நாள் சாப்பாடும், மற்ற நாள்கள் கலவை சாதமும் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.