வா்த்தக சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விடுதிகளை முன்கூட்டியே மூடவும், அதனால் தோ்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கவும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இப் பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் வடமாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோா் படிக்கின்றனா். இவா்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். இந்நிலையில் மே 1 ஆம் தேதிக்குள் அனைத்துத் தோ்வுகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன.
விடுதிகளுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டா் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கமாக மே மாதம் நடக்கும் இறுதிப் பருவத் தோ்வுகளை நிகழ் மாத இறுதியில் நடத்தி முடிக்க பல்கலைக் கழகத் தரப்பு முடிவு செய்து, அதற்கான தகவல்களைக் காரணம் தெரிவிக்காமல் துறைத் தலைவா்களுக்கு அனுப்பியுள்ளது.
இதனால், முன்கூட்டியே அதாவது ஒரு மாதத்துக்கு முன்பே தோ்வுகளை எதிா்கொள்ள வேண்டிய சூழலுக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

சிலிண்டா் தட்டுப்பாடு: தேநீா் கடைகள், உணவகங்கள் மூடல்

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!

ஊத்தங்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மக்கள் அவதி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


