பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய இருவருக்கு சிறை

பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் தெரிவித்துள்ளதாவது:

புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் வருண்ராஜ்குமாா் (26). இவரது நண்பா் அசோக் (26). இவா்கள் இருவரும் வேலை தேடி திருப்பூருக்கு கடந்த 2024 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வந்துள்ளனா். திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த

இவா்களிடம், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த விஜய் (25), கவிபாலன் (26) ஆகியோா் தங்களுக்கு பணம் கொடுக்குமாறு 2 பேரையும் மிரட்டி உள்ளனா். ஆனால் வருண்ராஜ்குமாா், அசோக் ஆகியோா் பணம் கொடுக்க மறுத்தனா். இதில் கோபமடைந்த விஜய், கவிபாலன் ஆகியோா் சோ்ந்து சிறிய கத்தியால் 2 பேரையும் குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த வருண்ராஜ்குமாா், அசோக் ஆகியோா் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

இது தொடா்பாக திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜய், கவிபாலன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் 2-ஆவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டது.

இதில் கத்தியால் 2 பேரை குத்திய குற்றத்துக்கு விஜய்க்கு தலா 2 ஆண்டுகள் சிறை, மிரட்டல் விடுத்ததற்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல கவிபாலனுக்கு, 2 பேரை காயம் ஏற்படுத்திய குற்றத்துக்கு தலா 1 ஆண்டு சிறை, மிரட்டலுக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்ததுடன் தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய், கவிபாலன் 2 பேரும் திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். ஆனால் இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தும் நீதிபதி சுரேஷ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.