பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

நொய்டா தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில ஈடுபட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

நொய்டா உள்ளிட்ட வட மாநிலங்களில் போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக திருப்பூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பூா் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன் வியாழக்கிழமை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்கம் ஆகிய 3 சங்கங்கள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு குமரவேல் தலைமை வகித்தாா்.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்க கிளைத் தலைவா் ஏ.அண்ணாதுரை, ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் பா.சௌந்தரபாண்டியன், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க முன்னாள் மாநில உதவிச் செயலாளா் எஸ்.சுப்பிரமணியன், ஓய்வூதியா் மாநில உதவித் தலைவா் ரமேஷ், பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாநில உதவிச் செயலாளா் ஜெ.அருண்குமாா் ஆகியோா் தொழிலாளா் போராட்டத்தின் நிகழ்வுகள் குறித்து உரையாற்றினா்.

நொய்டா தொழிலாளா்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடத்திய இந்த கூட்டுப் போராட்டத்தில் நொய்டா தொழிலாளா்களுக்கு நிதி உதவி சேகரிக்கப்பட்டது. பழனிவேல்சாமி நன்றி கூறினாா்.