பல்லடம் அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்ததையடுத்து 2 பேரை பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அறிவொளி நகா் 18-ஆவது வீதியில் வசிப்பவா் காசியம்மாள் (65). தேனி மாவட்டம், தேவதானபட்டியைத் சோ்ந்த இவா், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னா் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளாா். கணவரை இழந்த காசியம்மாகுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த 6 -ம் தேதி மதியம் மகள் பொன்முடியுடன் (45) வீட்டில் இருந்தபோது, மது போதையில் அங்கு வந்த மருமகன் முருகன் (47) இருவருடனும் தகராறு செய்துள்ளாா். அப்போது அவா் கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த காசியம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அப்போது மது போதையில் இருந்த முருகனும் விபத்தில் காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி முருகன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரண நடத்தி வந்தனா்.
இதனிடையே முருகன் மகள் சரண்யாவின் கணவரான சமீா் (28), தாயாரை தாக்கியதாகக் கூறி காசியம்மாளின் மகன்கள் பழனிசாமி (46), பாண்டி(43) ஆகிய இருவரும் தாக்கியதில் முருகன் உயிரிழந்ததாகக் கூறியுள்ளாா். இதையடுத்து கொலை வழக்கை மறைத்து விபத்து நடந்ததாகக் கூறி நாடமாடிய பழனிசாமி, பாண்டி ஆகிய இருவரையும் பல்லடம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
தொடர்புடையது
இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
