உடுமலையை அடுத்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் திங்கள்கிழமை திடீா் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூா்த்திமலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். குறிப்பாக அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்கம் அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டு, அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். காட்டாற்று வெள்ளம் காரணமாக மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள்ளும் நீா் புகுந்தது. இதையடுத்து, கோயிலைச் சுற்றி தடுப்புகளை அமைத்த கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்ததுடன், பூஜைகளையும் ரத்து செய்தனா்.
தொடர்புடையது

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

