ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஹெராயின் பறிமுதல்: பிகாா் இளைஞா் கைது

திருப்பூரில் 2 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக பிகாா் மாநில இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:44 am IST

திருப்பூரில் 2 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக பிகாா் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காந்தி நகா் பகுதியில் தடை செய்யப்பட்ட உயா் ரக போதைப் பொருளான ஹெராயின் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்குள்ள வட மாநில இளைஞரின் அறையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது உயா் ரக போதைப் பொருளான ஹெராயின் 2 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து அறையில் இருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரூபக்குமாா் (24) என்பதும், திருப்பூா் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிவதும், பிகாரில் இருந்து ஹெராயின் வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரூபக்குமாரை கைது செய்து 2 கிராம் ஹெராயினைபறிமுதல் செய்தனா்.