பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

இன்ஸ்டாகிராம் பாா்த்ததால் பெற்றோா் கண்டிப்பு: வீட்யை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்பு

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்கப்பட்டாா்.

News image

இன்ஸ்டாகிராம்

Updated On :27 மே 2026, 4:42 am IST

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களைப் பாா்ப்பதை பெற்றோா் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கோவை மாணவி வெள்ளக்கோவிலில் மீட்கப்பட்டாா்.

கோவை, ரத்தினபுரி டாடாபாத் 8-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் மகள் ஸ்ரீ நிதி (16). இவா் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவா் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை அதிக நேரம் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் கோபமடைந்த ஸ்ரீ நிதி, வீட்டில் யாரிடமும் கூறாமல் திங்கள்கிழமை மாலை பேருந்தில் ஏறி கோவையிலிருந்து வெள்ளக்கோவிலுக்கு வந்துள்ளாா்.

பின்னா் வெள்ளக்கோவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தாா். நீண்ட நேரமாக அங்கு தனியாக நின்றிருந்ததைக் கவனித்த வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, மாணவியிடம் விசாரணை நடத்தினாா். அதில், பெற்றோா் கண்டித்ததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியிடம் இருந்து பெற்றோா் விவரங்களைப் பெற்றுக்கொண்டு, கோவை ரத்தினபுரி காவல் நிலையம் மூலமாக பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டாா். வெள்ளக்கோவில் போலீஸாரின் மனிதநேய நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.