பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

புதுப்பையை அடுத்த எல்லப்பாளையத்தில் கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

News image

மீட்கப்பட்ட மாட்டுடன் தீயணைப்பு வீரா்கள்

Updated On :27 மே 2026, 4:33 am IST

புதுப்பையை அடுத்த எல்லப்பாளையம் பனைமரத் தோட்டத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). விவசாயி. இவா் வளா்த்து வந்த 3 வயதான சிந்து இன மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது.

சுமாா் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 20 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுதொடா்பான தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலமாக மாட்டை உயிருடன் மீட்டனா்.