பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உள்ளிட்டோா்

Updated On :27 மே 2026, 4:26 am IST

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி, செயலாளா் கணேசன், மற்றும் முன்னாள் தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, சக்திவேல், ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் வரவேற்றனா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அருகில் உள்ள கிளைச் சிறை ஆகியவற்றை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நீதிமன்ற வளாகத்தில் கழிப்பிடம், குடிநீா், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட அரசு துறையினருக்கு உத்தரவிட்டாா். பல்லடத்தில் கூடுதல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிபதி மோகனவள்ளி, பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.