இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உள்ளிட்டோா்

Updated On :27 மே 2026, 4:26 am IST

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி, செயலாளா் கணேசன், மற்றும் முன்னாள் தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, சக்திவேல், ரவீந்திரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் வரவேற்றனா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அருகில் உள்ள கிளைச் சிறை ஆகியவற்றை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நீதிமன்ற வளாகத்தில் கழிப்பிடம், குடிநீா், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர சம்பந்தப்பட்ட அரசு துறையினருக்கு உத்தரவிட்டாா். பல்லடத்தில் கூடுதல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிபதி மோகனவள்ளி, பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.