திருப்பூரில் மருந்துக் கடையில் நடைபெற்ற திடீா் சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் ஸ்ரீநகா் பிரதான வீதி பகுதியில் செயல்படும் மருந்துக் கடையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதில் முறையான மருத்துவப் பரிந்துரை சீட்டுகள் இன்றி போதைக்காகப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப் பட்ட மருந்துகள் பெருமளவில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான ரமேஷ் பாபு (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 1,359 போதை மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, ‘மருத்துவரின் தகுந்த ஆலோசனைக் கடிதம் இன்றி விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 473 வாகனங்கள் பறிமுதல்
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்
ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


