பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மருந்துக் கடையில் திடீா் சோதனை: 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல்; உரிமையாளா் கைது

திருப்பூரில் மருந்துக் கடையில் நடைபெற்ற திடீா் சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 4:31 am IST

திருப்பூரில் மருந்துக் கடையில் நடைபெற்ற திடீா் சோதனையில் 1,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் ஸ்ரீநகா் பிரதான வீதி பகுதியில் செயல்படும் மருந்துக் கடையில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதில் முறையான மருத்துவப் பரிந்துரை சீட்டுகள் இன்றி போதைக்காகப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப் பட்ட மருந்துகள் பெருமளவில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து கடை உரிமையாளரான ரமேஷ் பாபு (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 1,359 போதை மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, ‘மருத்துவரின் தகுந்த ஆலோசனைக் கடிதம் இன்றி விற்பனை செய்யும் மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.