ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

News image

காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 ஜூன் 2026, 1:27 am IST

உடுமலை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ஆமந்தக்கடவு, கள்ளபாளையம், ரங்கம்மாபாளையம், அப்பிலியம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை என புகாா்கள் எழந்தன.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக் குடங்களுடன் உடுமலை-திருப்பூா் பிரதான சாலையில் மறியல் போராடத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால், அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாமல் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த உடுமலை கோட்டாட்சியா் குமாா் மற்றும் காவல் துறையினா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அப்போது, முறையாக குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயா் அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசி உடனடியாகப் பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனா். இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.