ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

News image

மீட்கப்பட்ட மாட்டுடன் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:17 am IST

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

மூலனூா் சாலை நாச்சிபாளையம் கிளாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி. விவசாயி. இவா் வளா்த்து வந்த சிந்து இன மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தபோது, தவறி தோட்டத்து கிணற்றில் விழுந்துவிட்டது.

சுமாா் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்த 10 அடி தண்ணீரில் மாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) பெ.வேலுசாமி தலைமையிலான வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு மூலம் மாட்டை உயிருடன் மீட்டனா்.