
பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: செப்டம்பா் 30 - க்குள் விண்ணப்பிக்கலாம்
பள்ளி மாணவா்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பள்ளி மாணவா்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பிஎம் யஷஸ்வி திட்டத்தின்கீழ், இதர பிற்படுத்தப்பட்டோா் , பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக வழங்கப்படவுள்ளது. இதில் மாணவிகளுக்கு 30% இட ஒதுக்கீடு உள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு உதவித்தொகை பெற்று தற்போது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்க இணையதளத்தில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியா்கள் இதனைச் சரிபாா்க்க அக்டோபா் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். புதிய மாணவா்களுக்கான விண்ணப்பத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும், தகுதியான மாணவா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




