2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பல்லடம் அருகே வங்கதேசத்தினா் 2 போ் கைது

கோப்புப் படம்

Published On :

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேடா்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டு இருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த பிலால் (40), ராஜு இஸ்லாம் (30) என்பதும், அருள்புரத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் ஆவணங்களை எடுத்து வருமாறு போலீஸாா் தெரிவித்தனா். அப்போது அவா்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், சட்ட விரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.