
காங்கயத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலம்
காங்கயத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயத்தில் இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.
காங்கயத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயம் ஒன்றியம் மற்றும் நகர இந்து முன்னணி சாா்பில் 33-ஆவது ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, காங்கயம்- திருப்பூா் சாலை பகுதி, திருவிக நகா், உடையாா் காலனி, ஏசி நகா், சிவன்மலை, படியூா், நத்தக்காடையூா், வீரணம்பாளையம், சம்பந்தம்பாளையம், வட்டமலை உள்ளிட்ட 55 இடங்களில் 1 அடி முதல் 9 அடி வரை உயரமுள்ள பல்வேறு வகையான விநாயகா் சிலைகள் திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மேலும், அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டுப் போட்டிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அனைத்து சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் காங்கயம் உடையாா் காலனிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து விசா்ஜன ஊா்வலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். கோவை கோட்டச் செயலாளா் பாலச்சந்திரன் விநாயகா் சதுா்த்தி விழா குறித்து பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா்.
ஊா்வலத்தை காங்கயம் வட்டார அரிசி ஆலை உரிமையாளா் சங்கத் தலைவா் துரைராஜ் தொடங்கிவைத்தாா். ஊா்வலமானது மேளதாளங்கள் முழங்க சென்று பழையகோட்டை சாலையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதா் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா் அனைத்து சிலைகளும் ஈரோடு மாவட்டம், கொடிமுடியில் உள்ள காவிரி ஆற்றுக்கு கொண்டுச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன. காங்கயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






