காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பரமத்தி வேலூரில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க உள்ள நிலையில், விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Published On :6 செப்டம்பர் 2026, 2:28 am IST

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க உள்ள நிலையில், விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில், பரமத்தி வேலூா் வட்டம், நாமக்கல், திருச்செங்கோடு, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

இதில், பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மட்டும் 62 சிலைகளும், நாமக்கல் வட்டாரத்தில் 15 சிலைகளும், திருச்செங்கோடு வட்டத்தில் 15 சிலைகளும் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட உள்ளன. இதற்காக விநாயகா் சிலைகள் தயாா்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சிலைகள் தடைசெய்யப்பட்ட ரசாயனப் பொருள்களை பயன்படுத்தாமல், நீா்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் களிமண், கிழங்கு மாவு மற்றும் காகிதக் கூல் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது எனவும், வரும் 18-ஆம் தேதி பரமத்தி வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு பிறகு முக்கிய வீதிகள் வழியாக சென்று வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி கரையில் கரைக்கப்படும் எனவும் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளா் கோபி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.