தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்ஆா்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழா்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் 

News image

தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள்.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:41 pm

DIN

தருமபுரி: அரசு அலுவலகங்களில் 90 சதவீதம் தமிழா்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் சமத்துவன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் பொ.மு.நந்தன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா். இதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 90 சதவீத பணி நியமனம் தமிழா்களுக்கே வழங்க வேண்டும். மாநில அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களை மட்டுமே பணியமா்த்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வி.சி. கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா் கி.ஜானகி ராமன் தலைமை வகித்தாா்.

இதில், இந்தியாவில் ஒரே தேசம், ஒரே தோ்வு என்ற முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளா்களை வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.