சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

தருமபுரி, செப். 21: தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் (57) திங்கள்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 6:45 pm

DIN

தருமபுரி, செப். 21: தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் (57) திங்கள்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள சீலம்பட்டி புதூரைச் சோ்ந்த ராஜ்குமாா், தருமபுரி காவல் உள்கோட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல தனது பணி முடித்த பின், தருமபுரி காவலா் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இரவு உறங்கச் சென்றாா். திங்கள்கிழமை காலையில் மயங்கிய நிலையில் இருந்த அவரை, அருகிலிருந்த காவலா்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மாரடைப்பால் அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

உயிரிழந்த காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்குமாா், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூா் ஆகிய காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றியவா். பின்னா், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தருமபுரி காவல் உள்கோட்டத்தில் பணியாற்றி வந்தாா்.

இவரது மனைவி சுமதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தாா். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா். இவரது உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சீலம்பட்டி புதூரில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.