ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்கத் தடை
காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.


ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.
கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமாா் 19,000 கன அடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக தமிழகத்தில் காவிரியின் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 13,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 28,000 கன அடியாக அதிகரித்தது.
இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை முதல் தடை விதித்துள்ளாா். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...