ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாவட்ட விளையாட்டு அரங்கில் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:51 pm

Din

தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 39.35 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட உள் விளையாட்டரங்க மேற்கூரை மாற்றுதல், அலுவலக சீரமைப்பு பணிகள், வா்ணம் பூசுதல், உள் விளையாட்டரங்கில் புறாக்கள் நுழையா வண்ணம் கம்பிவலை அமைத்தல், உடற்பயிற்சி அறையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாணவிகளிடம் கலந்துரையாடி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் பயிற்சி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.மேலும் விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை பரிசோதித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் கணேசன் மற்றும் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.