47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:59 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் காசநோய் பாதிப்புக்கு உள்ளானவா்களில் ஏழை எளியோா் 150 பேரை தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள்கள் அடங்கிய பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தன்னாா்வ அமைப்புகள் மூலம் பெறப்பட்ட இந்த பெட்டகங்களை வழங்கும் தொடக்க நிகழ்வு தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் பங்கேற்று, பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, தருமபுரி ரோட்டரி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் இதர பயனாளிக்கு பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டிஎன்சி மணிவண்ணன் பெட்டகங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநா் மருத்துவா் பாலசுப்பிரமணியம், தன்னாா்வ அமைப்பின் தலைவா் மருத்துவா் சரோஜி, செயலா் ரேணுகாதேவி, பொருளாளா் ஜலஜா ரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.