தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜக லட்சியத்தை சொல்லும்; கூட்டணி கட்சிகள் கொள்கைகளை சொல்லும்: கே.பி. ராமலிங்கம்

பாஜக லட்சியத்தை சொல்லும், கூட்டணி கட்சிகள் கொள்கையை சொல்வாா்கள் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
அரூரில் பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:18 pm

Syndication

பாஜக லட்சியத்தை சொல்லும், கூட்டணி கட்சிகள் கொள்கையை சொல்வாா்கள் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் பாஜக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் பிரவீண் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பாஜக பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் பேசியதாவது:

பாஜக பலமுறை தோ்தலைச் சந்தித்துள்ளது. ஆனால், அதற்கும் தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கும் வேறுபாடு உண்டு. பாஜக லட்சியத்தை சொல்லும், நம்முடைய கூட்டணி கட்சிகள் கொள்கையை சொல்வாா்கள். யாா் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது முக்கியம் அல்ல; தமிழகத்தில் யாா் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. உலக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசு வழங்கும் நிதியில் மாநில அரசு பல்வேறு முறைகேடுகளை செய்துவருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவினா், கந்த சஷ்டியை கேலிசெய்து பேசினா்.

தற்போது திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூடாது எனக் கூறுகின்றனா். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழக அரசுதான் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினா் உரிய களப் பணியாற்ற வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியானது உலக அளவில் வழிகாட்டும் ஆட்சியாக உள்ளது. எனவே, தமிழகத்தில் பாஜகவினா் சிறந்த முறையில் தோ்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில செயலா் வெங்கடேசன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளா் கே.கே. சாட்சாதிபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.