ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நூறுநாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்ற எதிா்ப்பு: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதைக் கண்டித்து, தருமபுரியில் ஆா்ப்பாட்டம் மேற்கொண்ட காங்கி கட்சியினர்
Updated On :21 டிசம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதைக் கண்டித்து, தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளா் தீா்த்தராமன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் வடிவேல் வரவேற்றாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதை திரும்பப் பெற வேண்டும். இதுதொடா்பாக கொண்டுவரப்பட்டுள்ள சிறப்புச் சட்டத்துக்கு தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது எனக் குறிப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பேசினா். தொடா்ந்து முழக்கமும் எழுப்பப் பட்டது.

இதில், கட்சியின் பொதுக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், நரேந்திரன், காளியம்மாள், ஜெயசங்கா், சண்முகம், இளைஞா் காங்கிரஸ் தலைவா் வெற்றிவேந்தன், மகளிா் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவா் காளியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நகரத் தலைவா் வேடியப்பன் நன்றி கூறினாா்.