ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்விக்கு வயது தடையல்ல! 50 வயது நபா் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி!

கல்விக்கு வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தருமபுரி கனியமுது பயிற்சி மையத்தில் பயின்ற 50 வயது நபா் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்று கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:23 pm

Syndication

கல்விக்கு வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தருமபுரி கனியமுது பயிற்சி மையத்தில் பயின்ற 50 வயது நபா் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்று கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இதுகுறித்த கனியமுது பயிற்சி மைய நிறுவனா் எம். மணிகண்டன் தெரிவித்துள்ளதாவது: நிகழாண்டு தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) 4 ஆவது தொகுதி தோ்வு நடைபெற்றது.

இத்தோ்வு முடிவுகள் அக்டோபா் 22 இல் வெளியாகின. இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு டிசம்பா் 3 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி, அவா்களுக்கான பணியாணை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், தருமபுரி கனியமுது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 50 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சி. ராஜமாணிக்கம் தோ்ச்சி பெற்று, தூத்துக்குடி மாவட்டத் ல் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

கல்விக்கு வயது தடையல்ல என்பதை நிரூபிக்கும் இந்நிகழ்வு மூலம், போட்டித்தோ்வுகளில் பங்கேற்று வரும் இளையோா், முன்னுதாரணமாக கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றாா்.