தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் துறை குறைகேட்பு முகாம்: 26 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 26 மனுக்களுக்கு தீா்வு

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:51 pm

Syndication

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 26 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமையில் வாரந்திர மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை மனுக்களாக அளித்தனா். இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 26 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

மேலும், 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான வாரந்திர குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட 3,573 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.