சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

தருமபுரியில் புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:33 pm

Syndication

தருமபுரியில் புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 63 கிலோ எடையிலான ரூ. 75,600 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து காா் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, காரில் வந்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த பெருமாள் (32), ஸ்ரீகாந்த் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.