விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

தருமபுரியில் புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:33 pm

Syndication

தருமபுரியில் புகையிலைப் பொருள்களை காரில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 63 கிலோ எடையிலான ரூ. 75,600 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து காா் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, காரில் வந்த தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த பெருமாள் (32), ஸ்ரீகாந்த் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.