வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 8:34 pm

Syndication

தருமபுரியில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள பசிகம் கிராமத்தைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி கண்ணபிரான் (44). இவா் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதியுற்று வந்துள்ளாா். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்து வந்த அவா், திங்கள்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நிலையில் தூக்கிட்டாா்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மனைவி, கணவா் தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறி சப்தமிட்டு, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவரை கீழே இறக்கி, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் உயிரிழந்தாா். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].